எழுத்தாளர் பெருமாள் முருகனுடன் கலந்துரையாடல்

சங்கமம் வழங்கும் சிறப்பு இலக்கிய நிகழ்வு!!
எழுத்தாளரைச் சந்திப்போம்! படைப்புகளைக் கொண்டாடுவோம்!
தமிழின் முக்கிய சமகால எழுத்தாளர்களில் ஒருவரான எழுத்தாளர் பெருமாள் முருகன் அவர்களை நேரில் சந்தித்து கலந்துரையாட, சங்கமம் உங்களை அன்புடன் அழைக்கிறது.
அவரது படைப்புகள், எழுத்துப் பயணம், தமிழ் இலக்கியம் மற்றும் வாசிப்பு அனுபவங்கள் குறித்து உரையாடவும், அவரிடம் நேரடியாகக் கேள்விகள் கேட்கவும் இது ஓர் அரிய வாய்ப்பு.
தமிழையும் தமிழ் இலக்கியத்தையும் நேசிக்கும் அனைவரும் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் கலந்துகொண்டு, இந்த இலக்கியச் சந்திப்பைச் சிறப்பிக்க அன்புடன் அழைக்கிறோம்.
எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய முக்கிய நூல்கள் சிலவற்றை சங்கமம் சேகரித்துள்ளது. நிகழ்வில் கலந்துகொள்வதற்கு முன் அவரது நூல்களை வாசிக்க விரும்புவோர் எங்கள் குழுவினரைத் தொடர்புகொள்ளவும்.
இது அனைவருக்கும் இலவச நிகழ்வு. நிகழ்வில் கலந்துகொள்ள முன்பதிவு அவசியம்.
கலந்துகொள்ள விரும்புவோர் கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தி முன்பதிவு செய்துகொள்ளவும்:
பதிவு செய்ய, கீழே உள்ள Google Form-ஐ பயன்படுத்தவும்.
https://forms.gle/R6zunD1NwQbD5SjJA
பெருமாள் முருகனைப் பற்றி மேலும் அறிய
எழுத்தாளர் பெருமாள் முருகனைப் பற்றியும், அவரது படைப்புகள் மற்றும் இலக்கியப் பயணம் பற்றியும் மேலும் அறிந்துகொள்ள, கீழே உள்ள இணைப்புகளைப் பார்வையிடவும்:
பெருமாள் முருகன் – அதிகாரப்பூர்வ இணையதளம்
https://perumalmurugan.in/
பெருமாள் முருகன் – விக்கிப்பீடியா
https://en.wikipedia.org/wiki/Perumal_Murugan
